vetrilai benefits in tamil : வணக்கம் நண்பர்களே..! இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது ஒரு பயனுள்ள செய்தி தான் அது என்னவென்றால் வீட்டில் வெற்றிலை கொடி வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள். நம்மில் பலரும் வெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பதை பார்த்திருப்போம் அப்படி இந்த வெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். அப்படி என்ன தான் நன்மைகள் என்றுதானே சிந்திக்கிறீர்கள்..! இந்த பதிவினை முழுமையாக படித்தால் உங்களுக்கேதெரியும்.

வெற்றிலை வளர்ப்பதின் நன்மைகள்: vetrilai benefits in tamil
வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் நிறைய நன்மைகள் ஏற்படும். அந்த நன்மைகள் சிலவற்றை பார்க்கலாம். வெற்றிலை நமது உடலில் இருக்கும் நோய்களுக்கு மிகவும் சிறந்த மருந்தாக அமைகிறது என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த வெற்றிலையை நமது வீட்டில் வளர்த்து வந்தால் கஷ்டங்களே இருக்காது.
மேலும் இந்த வெற்றிலைஉள்ள வீட்டில் மிகுந்த நன்மைகள் நடப்பது மட்டுமின்றி எந்த காரியத்தை தொட்டாலும்,அந்த காரியமெல்லாம் துலங்கும், நமது வீட்டில் வெற்றிலை வைத்திருந்தால் ஹனுமானின் ஆசீர்வாதம் முழுமையாக நிறைந்து காணப்படும். அதனால் எந்த வித தீயசக்திகளோ, எதிர்மறை கொண்ட எண்ணங்களோ நமது வீட்டில் எப்பொழுதும் இருக்காது.
பொதுவாக நாம் வீட்டில் இருக்கும் சுவாமிகளுக்கு பூஜை செய்தாலும் சரி கோவிலுக்கு சென்று அங்குஅமைத்துள்ள சுவாமிகளுக்கு பூஜை செய்து அர்ச்சனை செய்து வழிபடும்போதும் சரி இந்த வெற்றிலையுடன் பாக்கு வைத்து பூஜை செய்வோம். அதேபோல் ஹனுமான் சுவாமிக்கு வெற்றிலையால் மாலைக்கட்டி வழிபட்டு வந்தால் அவருடைய ஆசீர்வாதம் முழுமையாக நமக்கு கிடைக்கும்.
வெற்றிலை ஒரு வீட்டில் இருந்தாலே லட்சுமிதேவியே அந்த வீட்டில் குடிகொண்டுள்ளதாக அர்த்தம். பொதுவாக கடன் தொல்லைகள் குறைய வேண்டுமென்றாலும் சரி நமது வீட்டில் பணப்புழக்கம் அதிகமாக இருக்க வேண்டுமென்றாலும் சரி இந்த வெற்றிலை கொடியை வீட்டில் வளர்த்தாலே போதும்.
வெற்றிலையில் உள்ள மருத்துவக்குணங்கள் :
வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவதால் நமது உடலுக்கு நிறைய நோய் எதிர்ப்புசக்தி கிடைக்கிறது. வெற்றிலையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Antioxidant) அதிகமாக காணப்படுவதால் நமக்கு எப்பொழுதும் முதுமையான தோற்றம் ஏற்படாது. மேலும் தொண்டையில் உண்டாகும் அனைத்து பிரச்சனைகளுக்கும் வெற்றிலை சாறு ஒரு நல்ல மருந்தாக அமையும்.
இந்த வெற்றிலையில் நார்ச்சத்து(Fiber), வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் கால்சியம் போன்றச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இதனால் சுவாசம் சம்மந்தமான பிரச்சனையால் அவஸ்தை படுகின்ற யாராக இருந்தாலும் ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன்மேலே சிறிதளவு நல்லெண்ணெய் தடவி அதனை சிறிது நேரம் சூடுப்படுத்தி நமது நெஞ்சின் மேல் வைத்து கொள்வதால் நல்ல பலனை பெறலாம்.
பொதுவாக பாலூட்டும் தாய்மார்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனை என்றால் அவர்களுக்கு பால்கட்டிக்கொள்ளும். அப்போது ஒரு வெற்றிலையை எடுத்துக்கொண்டு அதன்மேலே சிறிதளவு விளக்கெண்ணெயை தடவி அதனை கொஞ்சம் நேரம் சூடுப்படுத்தி அதனை அவர்களின் மார்பின் மீது வைத்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பால் கட்டி வலிக்குறையும்.
வெற்றிலையை கஷாயமாக செய்து தினமும் குடித்து வருவதால் இதயம் நன்கு பலமாகும். நுரையீரலில் ஏற்படும் கபம் வெளியேறுகின்றது. வெற்றிலையின் சாற்றை பாலுடன் கலந்து குடித்தால் மனதில் ஏற்படும் பதற்றம் குறைகின்றது.
Also Read : செம்பருத்தி செடியில் இருக்கும் மாவு பூச்சியை முற்றிலும் அழிக்க மைதா மாவு போதும் …!
வெற்றிலையை நன்றாக மென்று சாப்பிடுவதால் கண்பார்வை அதிகமாகின்றது, எலும்புகள் பலமடைகின்றன. அதேபோல நீங்கள் எப்பொழுது வெற்றிலை சாப்பிட்டாலும் வெற்றிலையின் காம்புகளை பிரித்து எடுத்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும்.
அதிகமாக உடல் எடை கொண்டவர்கள் ஒரு வெற்றிலையில் 5-6 மிளகு வைத்து நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை காணலாம். குழந்தைகளுக்கு உண்டாகும் அதிகப்படியான சளித்தொல்லைகளை போக்க வெற்றிலைச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டுவந்தால் சிறந்த நன்மையை அளிக்கும்.
முழங்கால் வலி, மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு வெற்றிலையை எடுத்து அதனை சூடுபடுத்தி கொள்ளவும். அதனை வலி இருக்கும் இடத்தில் வைத்து கட்டினால் வலி நீங்கும். மேலும் தலையில் பொடுகுத்தொல்லை அதிகமாக இருப்பவர்கள் இந்த வெற்றிலையை அரைக்கவும். அரைத்த பேஸ்ட்டினை தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவைத்த பிறகு தலை குளிப்பதால் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும். முடியும் நன்றாக கருமையாக இருக்கும். மேலும் வெற்றிலையை சாப்பிடுவதால் வாயில் உண்டாகும் துர்நாற்றத்தை போக்க மிகவும் உதவுகிறது.
வெற்றிலை கொடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது. அதனால் நீங்களும் உங்கள் வீட்டில் வெற்றிலை கொடியை வளர்த்து பயன்பெறுங்கள்.
