முகூர்த்தக்கால் நடுவது ஏன்..? | Why is Mukurthakal Planted During Marriage in Tamil
இந்து மதங்களில் ஒருவருக்கு திருமணம் நடக்க போகிறது என்றால் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே வீட்டில் முகூர்த்த கால் நடுவார்கள். இது எதற்காக நடுகிறார்கள் என்று பலருக்கு தெரியாது..? இந்த முகூர்த்த கால் நடும் வழக்கத்தை நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் கடைபிடித்து வருகிறோம். இந்த முகூர்த்த கால் அல்லது பந்தக்கால் ஏன் நடுகிறார்கள்..? அவற்றை நட்டால் என்ன பயன்..? என்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முகூர்த்தக்கால் நடும் முறை எப்படி வந்தது..?
முற்காலத்தில் எல்லாம் திருமணம் நடக்க போகிறது என்றால் அந்நாட்டின் மன்னனுக்கு மரியாதையை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை மன்னனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால் அரசனால் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வர முடியாது. அதற்காக மன்னன் தனது ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். மன்னனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டால் அந்த கல்யாணம் அரசனால் அங்கீகரிக்கப்ட்டது என்று அர்த்தம். இந்த வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வழி வழியாக இப்பொழுது பந்தக்கால் நடும் பழக்கமானது வளர்ந்து வந்துள்ளது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

கேரட்டிற்கான தமிழ் பெயர் இது தானா..?
முகூர்த்தக்கால் நடுவது ஏன்..? Why is Mukurtha Kal in marriage
திருமணத்திற்கு முன்பாகவே வீட்டில் முகூர்த்த கால் நட்டு மாவிலையால் தோரணம் கட்டுவது மரபு.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
பந்தக்கால் நடுவதற்குசவுக்கு மரம் அல்லது மூங்கில் மரம் ஆகியவற்றை வெட்டி சுத்தம் செய்து அதில் மஞ்சள், குங்குமம் தடவி பூக்களால் அலங்கரித்து வடகிழக்கு மூலையில் நடுவார்கள்.
இந்த வடகிழக்கு மூலையை ஈசான்ய மூலை என்றும் சொல்லுவார்கள். இத்திசை சிவாம்சம் கொண்ட தேவனுக்குரிய திசையாக உள்ளதால், நடக்கப்போகும் கல்யாணம் இறைவனின் ஆசியோடு நடைபெற்று மணமக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை குறிப்பதற்காக முகூர்த்த கால் நடப்படுகிறது.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
கொண்டைக்கடலை பிரியாணி எப்படி செய்வது தெரியுமா?