Pudhan Kilamai Mandiram : கிழமைகளில் புதன்கிழமைக்கு எப்போதுமே ஒரு தனிப்பெரும் சிறப்பு உண்டு. இதனை சொன்னாலே உடனே உங்களுக்கு நிச்சயமா ஞாபகம் வந்திருக்கும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்னும் பழமொழி.

எல்லா வகையான சுபகாரியங்களுக்கும் புதன்கிழமை நாம பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி ஒரு உயர்ந்த நாளாக புதன் கருதப்படுகிறது. இந்த நாளுக்குரிய பகவான் அது எல்லாருக்குமே தெரியும் புதன் கிரகத்திற்கு தேவதையாக விளங்கக் கூடியவர் தான் மகாவிஷ்ணு. ஒவ்வொரு புதன்கிழமைகளில் காலையில குளித்து முடித்து விளக்கு ஏற்றும் போது பின்வரும் துதியை கூறுவதன் மூலமா குடும்பத்துல செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம், ஆகியவைகளை அடைவீர்கள்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
Read Also : கருங்காலி மாலை இவங்கல்லாம் அணிய கூடாது…
Pudhan Kilamai Mandiram in Tamil
புதன் பகவானுக்கான துதி
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
விஷ்ணு பகவான் துதி
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா வென்ற யிரண்டெழுத்தினால்
விநாயகர் துதி
வக்ர துண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ரப !
அவிக்னம் குருமே தேவ
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
சிவன் துதி
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே.
முருகன் துதி
ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க -செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் !
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
அம்பாள் துதி
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே
Video : புதன் கிழமை சொல்ல வேண்டிய துதி!!
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇