ஆனந்த முனிவருக்கு சிவபெருமான் ஸ்ரீமுக நடராஜராக எழுந்தருளி ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டிய புராண இதிகாசம் கொண்ட பஞ்சவடீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் 1,000 ம் பேருக்கு மேல் பக்தர்கள் பங்கேற்பு
Panchanadeeswarar Kumbabishekam
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த ஆனந்த தாண்டவபுரத்தில் பழமையான பஞ்சவடிஸ்வரர் ஆலயம் உள்ளது. 63 நாயன்மார்களின் மானகஞ்ச நாயனார் அவதாரம் செய்து இறைவன் திருவிளையாடல் செய்த ஆலயமாகும்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇

இறைவன், ஆனந்த முனிவருக்கு ஸ்ரீமுக தாண்டவம் ஆடி காட்டிய தலமாகும். ஆகவே இந்த இடம் ஆனந்த தாண்டவபுரம் என்று பெயர் பெற்றது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது
இதையும் படிங்க : தமிழகத்தில் அமைந்திருக்கும் அம்பிகையின் சக்தி பீட ஆலயங்கள்
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதனை ஒட்டி 6 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன .இதற்காக 52 யாக குண்டங்கள் அமைத்து நவக்கினி ஹோமம் நடைபெற்றது.108 வேத விற்பன்னர்கள் கொண்டு மந்திரங்கள் ஓதி, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
6 கால யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மகா பூர்ணாகுதிக்கு பிறகு மேளதாளங்கள் ஒலிக்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி அம்பாள் கருவறை கோபுரங்கள் ராஜகோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
தொடர்ந்து சுவாமி அம்பாள் ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் கலசபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
👇 இந்த விளம்பரத்தை கிளிக் செய்து எங்களுக்கு உதவவும் 👇
இதையும் படிங்க : ஆரோக்கியமான சத்துகள் கொண்ட சுவையான முடக்கத்தான் ஊத்தாப்பம் செய்வது எப்படி?