ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு திடீரென விவாகரத்தை அறிவித்தனர்.
18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் திடீரென பிரிந்ததால் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது.
ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பின் இயக்கிய லால் சலாம் படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.
ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முழுமையாக ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
அவர் ஓம் நமச்சிவாய மந்திரத்தை பேப்பரில் பல நூறு முறை எழுதியிருக்கிறார்.
அதை ஐஸ்வர்யாவே இஸ்ட்டாக்ராமில் வெளியிட்டிருக்கிறார்.